காவல் பணிக்கு வந்த காவலாளி தற்கொலை

by Staff / 15-02-2023 04:25:02pm
காவல் பணிக்கு வந்த காவலாளி தற்கொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த நாராயணசாமி என்பவரது, மகன் 58 வயதான நாச்சிமுத்து இவர், கோவை குறிச்சி அடுத்த சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார், நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த நாச்சிமுத்துவின், பணியை மாற்றுவதற்காக மற்றொரு செக்யூரிட்டியான அமிர்தம் என்பவர் நேற்று காலை வந்துள்ளார், அப்போது நிறுவனத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து அமிர்தம் இரவு பணியில் இருந்த நாச்சிமுத்துவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது, இதை தொடர்ந்து அமிர்தம் நிறுவனத்தில் துணை மேலாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார் தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து பார்த்த போது நிறுவனத்தின் உள்ளே நாச்சிமுத்து தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், 

 

Tags :

Share via