கடலில் விடப்பட்ட பங்குனி ஆமைக்குஞ்சுகள்
கன்னியாகுமரி மாவட்ட துவாரகாபதி மற்றும் முருங்கவிளை கடற்கரை பகுதிகளில் வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் வழிகாட்டுதலின்படி கடல்ஆமை பொரிப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன.கன்னியாகுமரி இயற்கை பாதுகாப்பு தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு இதுவரை 1204 பங்குனி ஆமை முட்டைகள் பொரிக்க வைக்கப்பட்டது.. அதில் 122 பங்குனி ஆமைக்குஞ்சுகள் பொரிந்தது. , ,. அவை முருங்கவிளை கடற்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.
Tags :