இளம்பெண் சடலம் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ். வாடி கிராமத்தை சேர்ந்த முரளியின் மனைவி ஜெனிதாதேவி ( 27). என்பவர் நேற்று அந்த பகுதியில் உள்ள பெரியார் பாசன கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக தவறி கால்வாயில் விழுந்துள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்தால் அவர் இழுத்து செல்லப்பட்டார் அங்கிருந்தவர்கள் கால்வாயில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி. யூனியன் அலுவலகம் சாலையில் உள்ள பெரியாறு பாலத்தின் அடியில் ஜெனிதா தேவியின் உடல் மிதப்பதாக வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :