உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்த முதல்வர்

by Staff / 04-05-2023 11:55:08am
உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்த முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல்களம் பரபரப்பாக உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்தார். கோரக்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார். அனைவரும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவில் 37 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via