காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.பாரமுல்லாவின் வாணிகிராம் பயீன் கிரி பகுதியில் இச்சம்பவம் நடந்தது. வெடிகுண்டுகளும், ஏ.கே.47, கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணப்படவில்லை என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். மே 2ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவ முயன்ற இரண்டு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். இவர்கள், ராஜஸ்தானின் பார்மர் வாலா ராணுவ செக்போஸ்ட் வழியாக நுழைந்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags :