அன்புமணி சொல்வதையெல்லாம் நாங்க கேட்க முடியாது: அமைச்சர்

by Staff / 25-10-2023 11:44:54am
அன்புமணி சொல்வதையெல்லாம் நாங்க கேட்க முடியாது: அமைச்சர்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி சொல்வதையெல்லாம் நாங்க கேட்க முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்புமணி ராமதாஸ் விமர்சிப்பதை நினைத்தெல்லாம் தங்களுக்கு கவலையில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் படபடவென பட்டாசு போல் வெடிப்பாக பேசியுள்ளார்.

 

Tags :

Share via