கரிமேடு கொலை வழக்கில் 5 பேர் கைது.
மதுரையில் நேற்றிரவு மதுபோதையில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் ராஜபாண்டி(24) என்ற டிரைவர் மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து கரிமேடு போலீசார் சம்பவ இடத்தில் இருந்த அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது மனோஜ்சிவா, செல்லூர் களத்து பொட்டல் பர்மா காலனி கிருஷ்ணகுமார் என்ற கிட்டு (26), பொன்னகரம் பிராட்வே தெரு ஸ்ரீ மணிகண்டன் (20), பொன்னகரம் லோகேஷ் (20), பெத்தானியாபுரம் தங்கபாண்டி (19), சிம்மக்கல் கண்ணன் (23) ஆகிய 6 பேரும் சேர்ந்து ராஜபாண்டியை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகிய அவர்களை பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மனோஜ் சிவா, ஸ்ரீமணிகண்டன், லோகேஷ், தங்கபாண்டி, கண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட ராஜபாண்டிக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவர் தற்போது பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :