கஞ்சா கடத்தியவர்கள் கைது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வருவதால் இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து போதிலும். கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் எழுப்பினார்கள்.இந்த நிலையில் திருமங்கலம் மது விலக்கு தடுப்பு போலீசார் நேற்று உசிலம்பட்டி ரோட்டில் ரோந்து சென்ற போது அணைப்பட்டி அருகேயுள்ள கல்யாணிபட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி(26), கல்லூத்தை சேர்ந்த பெருமாள்(52) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தை சோதனையிட் போது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :