திருமணத்தில் பண மழை

by Staff / 19-02-2023 04:22:16pm
திருமணத்தில் பண மழை


நமது நாட்டில் திருமண நிகழ்ச்சிகளை வெகு ஆடம்பரமாக நடத்த மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் திருமணம் ஒன்றில் பண மழை பொழிய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் அகோல் கிராமத்தை சேர்ந்த கரிம் யாதவ் என்ற நபர், தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் மண்டபத்தின் மீது ஏறி நின்று ரூ.500 நோட்டுகளை மக்கள் முன் வீசியுள்ளார். அவர் ரூ.50 லட்சம் வரை வீசியதாக தெரியவந்துள்ளது. இதை பண மழை பொழிவதாக நினைத்து மக்கள் முந்தி அடித்து பணத்தை எடுத்து சென்றனர்.

 

Tags :

Share via