நிபா வைரஸுக்கு இறந்தவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி

by Editor / 14-09-2023 09:10:10am
 நிபா வைரஸுக்கு இறந்தவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு இறந்தவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நால்வருடனும் தொடர்பில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 168 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 7 பஞ்சாயத்துகளை தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், வருவாய் அலுவலங்கள் தவிர மற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை மூடவும் ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு இறந்தவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதி

Share via