மத நல்லிணக்க, சமுதாய ஒற்றுமை மாநாட்டில் கலந்துகொள்ள  கனிமொழி கருணாநிதிக்கு அழைப்பு.

by Editor / 14-09-2023 09:02:06am
மத நல்லிணக்க, சமுதாய ஒற்றுமை மாநாட்டில் கலந்துகொள்ள  கனிமொழி கருணாநிதிக்கு அழைப்பு.

தென்காசி மாவட்டம் கடையம் வட்டார ஐக்கிய ஜமாத், மற்றும்  தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத்கள் நடத்த இருக்கும்,மத நல்லிணக்க, சமுதாய ஒற்றுமை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கனிமொழி கருணாநிதியை தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் VTSR.முகம்மது இஸ்மாயில், பொருளாளர் அலி சேக் மன்சூர், ஒருங்கினப்பாளர் அண்ணாவி.முகம்மது ஸலீம், கடையம் வட்டார ஜக்கிய ஜமாத் செயலாளர் மைதீன் (எ) ராசப்பா, பொருளாளர் அபு தாஹிர். ஆலோசகர் புகாரி மீரா சாகிப், மற்றும் விழா அமைப்பாளர்கள்,பொட்டல்புதூர் முகம்மது கனி,சேக் மதார் (எ)துரை,அஜீஸ் அகமது,M.S. அலி, வீராசமுத்திரம் ராஜா,  முதலியார்பட்டி முஹம்மது ஆகியோர்சந்தித்தார்கள்.

 

Tags : மத நல்லிணக்க, சமுதாய ஒற்றுமை மாநாட்டில் கலந்துகொள்ள  கனிமொழி கருணாநிதிக்கு அழைப்பு.

Share via