2 நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணி மரணம்- ஐ.நா.சபை அறிக்கை.

by Editor / 24-02-2023 08:45:29am
2 நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணி மரணம்- ஐ.நா.சபை அறிக்கை.

உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் கர்ப்பக்காலம் அல்லது பிரசவத்தின்போது ஒரு பெண் உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், காங்கோ, சிரியா போன்ற மனித உரிமை மீறல்கள் அதிகமுள்ள நாடுகளிலும் ஏழ்மையான நாடுகளிலும் தான் இந்த இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், இவற்றை குறைக்க அந்த நாடுகள் சிறந்த முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் எனவும் ஐநா கேட்டுக்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் உலக நாடுகள் உதவ முன்வருவதை ஏற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via