பழைய கட்டிடம் இடிந்து 14 பேர் பலி
பிரேசிலில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னும் சிலர் பலத்த காயம் அடைந்தனர். இதனை அடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவின் பாலிஸ்டா பகுதியில் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் தடை உத்தரவு அமலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.Tags :