விபத்தில் மருத்துவ உதவியாளர் பலி

by Staff / 24-02-2023 03:21:44pm
விபத்தில் மருத்துவ உதவியாளர் பலி

விபத்தில் சிக்கி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ உதவியாளர் பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் கல்யாணபுரம் உப்புக்காட்சிபேட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் பேருந்துக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஜெய்சங்கர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் சார்பில் அவரது குடும்பத்திற்கு இறுதிச்சடங்கிற்காக ரூபாய் 25000 நிதி உதவி வழங்கப்பட்டது.

 

Tags :

Share via