முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டில் அலைபேசி பறிமுதல்

by Admin / 05-07-2021 05:45:18pm
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டில் அலைபேசி பறிமுதல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டில் அலைபேசி பறிமுதல்

மதுரை-நடிகையுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மதுரை வீட்டில் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.
நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கில், ஜூன் 20ல் கைதான மணிகண்டனை, இரண்டு நாட்கள் காவலுக்கு எடுத்து விசாரிக்க, சென்னை அடையாறு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு, நேற்று காலை உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். காலை 6:45 முதல் 9:30 மணி வரை நடந்த சோதனையில், அலைபேசி ஒன்று மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் முக்கிய எண்கள் இருப்பதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்தார்.
சாந்தினிக்கு இந்த அலைபேசி மூலம், 'வாட்ஸ் ஆப், டெலிகிராம்' வாயிலாக தகவல் பரிமாறினாரா என சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்ய உள்ளனர். பின், மணிகண்டனை மீண்டும் சென்னை அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via