கோயில் பிரச்சனை - 144 தடை

by Staff / 01-03-2023 11:08:58am
கோயில் பிரச்சனை - 144 தடை

திருச்சியில் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி மதியம் 2 மணி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via