வாலிபர் வெட்டிக் கொலை நெல்லை  பேட்டையில் பதட்டம்

by Editor / 22-11-2022 09:08:44am
 வாலிபர் வெட்டிக் கொலை நெல்லை  பேட்டையில் பதட்டம்

நெல்லை  பேட்டை ஐடிஐ அருகே வாலிபர் வெட்டிக் கொலை. நடுக்கல்லூரைச் சோ்ந்த நம்பிராஜன் (30) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக முதற்கட்ட தகவல். பேட்டை போலிசாா் உடைலைக் கைப்பற்றி விசாரணை. கொலை செய்யப்பட்ட நம்பிராஜன் என்பவர் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்தார்.

நெல்லை : மாவட்டம் பேட்டை அருகே உள்ள நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பி ராஜன் இவர் நேற்று இரவு பேட்டை ஐடிஐ அருகே வந்து கொண்டிருந்தபோது அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது இதில் படுகாயம் அடைந்த நம்பி ராஜன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார் 

இது குறித்து பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சீவலப்பேரியில் மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அதே சமுதாயத்தைச் சேர்ந்த நடுக்கல்லூரியில் சேர்ந்த நம்பி ராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்

 வாலிபர் வெட்டிக் கொலை நெல்லை  பேட்டையில் பதட்டம்
 

Tags :

Share via