மதுரை - திருமங்கலம் புதிய அகல ரயில் பாதையில் மார்ச் 3 அன்று அதிவேக சோதனை ஓட்டம்.

by Editor / 01-03-2023 07:22:42pm
மதுரை - திருமங்கலம் புதிய அகல ரயில் பாதையில் மார்ச் 3 அன்று  அதிவேக சோதனை ஓட்டம்.

மதுரை - திருமங்கலம் ரயில் நிலையங்கள்  இடையே 17 கிமீ தூரத்திற்கு இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது அகல ரயில் பாதை  இணைப்பு பணிகள் மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த புதிய இரண்டாவது அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முக்கிய ஆய்வினை தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா, மார்ச் 3 அன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்த இருக்கிறார். இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் வேளையில்  பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய அகல ரயில் பாதையை கடக்க அல்லது நெருங்க முயற்சிக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via