தந்தையால் பாலியல் வன்கொடுமை.. மகள் தற்கொலை

by Staff / 03-03-2023 03:20:55pm
தந்தையால் பாலியல் வன்கொடுமை.. மகள் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மனதை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வசாய் தாலுகாவை சேர்ந்த சிறுமி (14) தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுபற்றி சிறுமி தனது தாயிடம் கூறியும் அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். இதனால், கடும் விரக்தியடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சிறுமி எழுதிய தற்கொலைக் கடிதத்தை மீட்ட போலீசார், தந்தையின் பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தனர். இந்த நிலையில், காவல்துறையின் குற்றவாளியான தந்தையை சமீபத்தில் கைது செய்தனர்.

 

Tags :

Share via