சாலை விபத்து.. 8 பேர் பலி

by Staff / 03-03-2023 03:28:00pm
சாலை விபத்து.. 8 பேர் பலி

ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள புடிக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. கக்கர் மஜ்ரா கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்தது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு விரைந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Tags :

Share via