ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் மோதல்.

by Editor / 06-03-2023 02:26:01pm
 ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் மோதல்.

 

அருந்ததியர்களை அவதூறாக பேசியதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்த ஆதித் தமிழர் கட்சியினருக்கும் இரு தரப்பினரும் மாறி, மாறி சரமாரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சி அமைப்பின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது

இன்று 50க்கும் மேற்பட்ட ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்தவர்களை ஆற்காடு சாலையில் போரூர் போலீசார் தடுத்து நிறுத்தி போலீசாரின் தடுப்பையும் மீறி பத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிய நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முற்றுகை போராட்டம் ஏற்கனவே நடைபெறும் என போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் முறையான பாதுகாப்பு பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல்  போரூர் போலீசார் இருந்ததால்தான் இந்த அடிதடி சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Tags :

Share via