மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அமைச்சர் உதயநிதி

by Staff / 14-03-2023 02:37:17pm
 மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அமைச்சர் உதயநிதி

தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்தத் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 8,36,593 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via