மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:
நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்ந்த போலி செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமிற்கான தகவலை சமூக வலைதளங்களில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தனியார் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக பரப்பி வருகின்றனர்.மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சுற்றறிக்கை மூலம் மட்டுமே பல்கலைக்கழகத்தில் இருந்து தரும் தகவல்கள் வெளியிடப்படும்.என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags :