ஜெனரேட்டரில் சிக்கி சிறுமி பலி கோவில் திருவிழாவில் பரிதாபம்

by Staff / 15-03-2023 04:53:15pm
ஜெனரேட்டரில் சிக்கி சிறுமி பலி கோவில் திருவிழாவில் பரிதாபம்

காஞ்சிபுரம், களக்காட்டூர் அடுத்த விச்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி காஞ்சனா, நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.சரவணனுக்கு, ஏழாம் வகுப்பு படிக்கும் லாவண்யா, 13, என்ற மகளும், ஆறாம் வகுப்பு படிக்கும் புவனேஸ்வரன் என்ற மகனும் இருந்தனர்.கடந்த 10ம் தேதி, விச்சாந்தாங்கல் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 10: 00 மணிக்கு, மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா புறப்பட்டது.அம்மனை அழைத்து சென்ற மாட்டு வண்டியில் மின்சாரத்திற்காக, 'ஜெனரேட்டரை' கட்டி சென்றனர். அதன் அருகில், லாவண்யா அமர்ந்து சென்றிருக்கிறார்.அப்போது, சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டர் சக்கரத்தில் சிக்கி நின்றது. இதனால், மின் விளக்குகள் அணைந்தன.ஊர்வலத்தில் சென்றவர்கள் ஜெனரேட்டர் அருகில் சென்று பார்த்தபோது, சிறுமியின் தலை முடி, ஜெனரேட்டரில் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அம்மன் வீதியுலா நிறுத்தப்பட்டது.தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை சிறுமி உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த மாகரல் போலீசார், பொது இடத்தில் ஜெனரேட்டரை பாதுகாப்பு இன்றி பயன்படுத்தியதால், அதன் உரிமையாளர் முனுசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via