சபரிமலை பக்தர்கள் பேருந்து மீது கற்கள் வீச்சு

by Staff / 20-11-2023 11:23:54am
சபரிமலை பக்தர்கள் பேருந்து மீது கற்கள் வீச்சு

ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா அத்திகாயத்தில் பைக்கில் வந்த இருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதேசமயம், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கற்கள் வீசியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடுகின்றனர். மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via