அதிரடி சோதனை கணக்கில் வராத பணம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்,

by Staff / 15-03-2023 05:37:40pm
அதிரடி சோதனை கணக்கில் வராத பணம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட இதர பணிகளுக்காக இடைத்த ரகங்கள் மூலம் கையூட்டு பெறப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, சென்னை ஆலந்தூர் சரக கையூட்டு ஒழிப்புத்துறை அலுவலக ஆய்வாளர்கள் விஷ்வ குமார், நாகலட்சுமி ஆகியோர் தலைமையிலான 12 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கையூட்டு ஒழிப்பு துறையினர் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர், இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் கையூட்டு ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் ஆய்வாள் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via