ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது - மஹுவா மொய்த்ரா
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது, சபாநாயகர் முன்னிலையில் இருந்து வழிநடத்துகிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் ஜனநாயகம் தாக்கப்பட்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் தனது ட்வீட்டில், கடந்த மூன்று நாட்களாக பாஜக அமைச்சர்களை மட்டுமே மைக்கில் பேச சபாநாயகர் அனுமதித்துள்ளார் என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூட பேச அனுமதிக்காமல் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ட்வீட்டிற்காக சிறை செல்லவும் தயார் என்றும் கூறியுள்ளார்.
Tags :