நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 16 பேர்

by Staff / 28-03-2023 01:23:22pm
நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 16 பேர்

மத்திய ஈக்வடார் நாட்டில் பயங்கர விபத்து நடந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பெரும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். 50 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயரமான மலையில் உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டதில், குடியிருப்பு பகுதிகள் தரைமட்டமாயின. இந்த விபத்துக்கு சில மணி நேரம் முன்னர் மலையில் நடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via