அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

by Staff / 28-03-2023 01:36:27pm
அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டெல்லியில் தாம் வசிக்கும் அரசு பங்களாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக‌ பதவி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி மக்களவைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என்றும், தற்பொழுது குடியிருந்த வீட்டில் எனக்கு நல்ல நினைவுகள் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via