பட்டதாரி இளம்பெண் தற்கொலை

by Staff / 28-03-2023 01:58:50pm
பட்டதாரி இளம்பெண் தற்கொலை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி மிளகாய்காரன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 2 மகன்களும், மனோன்மணி (வயது 23) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் குமார் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இதையடுத்து பூங்கொடி தனது மகன் மற்றும் மகளுடன் தொளசம்பட்டி ராமகிருஷ்ணனூர் செட்டியார் தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மனோன்மணி பட்டப்படிப்பு முடித்துவிட்டு குரூப்-4 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் மனோன்மணி குறைந்த மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனால் வேலை கிடைக்காது என்று மனமுடைந்த மனோன்மணி நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த விஷத்தை (எலிபேஸ்ட்) தின்று மயங்கினார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார் பூங்கொடி மற்றும் உறவினர்கள் மனோன்மணியை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மனோன்மணி இறந்தார். இதுகுறித்து தொளசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குரூப்-4 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via