குப்பை வண்டியில் சிக்கி குழந்தை பலி

by Staff / 29-03-2023 12:38:55pm
குப்பை வண்டியில் சிக்கி குழந்தை பலி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் அடியில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. மவுலா அலி ஆர்டிசி என்ற காலனியில் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் பின்புறம் முகமது ரசாக் என்ற குழந்தை ஓடிச்சென்று விழுந்தான். குப்பை வண்டி டிரைவர் பின்னோக்கி வாகனத்தை இயக்கிய போது, குழந்தையை கவனிக்கவில்லை. குழந்தை மீது பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
 

 

Tags :

Share via