சுங்க கட்டண உயர்வு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுத்தியுள்ளார். சுங்கச்சாவடி சீர்திருத்தங்களை செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலைகளை எந்த வகையிலும் மேம்படுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது தனது கண்டனத்தை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags :