வெடிகுண்டை திருமண பரிசாக கொடுத்த முன்னாள் காதலன்
திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மணப்பெண்ணின் முன்னாள் காதலன், ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்து பரிசாக கொடுத்துள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்து மணமகள் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் ஆத்திரத்தில் மணமக்களை கொலை செய்ய வெடிகுண்டு வைத்ததாக அவர் போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சர்ஜு மார்க்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Tags :