எடப்பாடி பழனிச்சாமியால் சொந்த ஊரில் கூட வெற்றி பெற முடியாது- டிடிவி தினகரன்

by Editor / 19-11-2022 10:33:22pm
எடப்பாடி பழனிச்சாமியால் சொந்த ஊரில் கூட வெற்றி பெற முடியாது-  டிடிவி தினகரன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எடப்பாடி பழனிச்சாமியால் இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் சொந்த ஊரில் கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. எங்களை போல் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க எடப்பாடியால் முடியாமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே அக்கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அம்மாவின் உண்ணையான விசுவாசிகள் ஒன்றிணைந்தால் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறலாம் என கூறினார்.

 

Tags :

Share via