இஸ்லாமிய இளைஞரை தாக்கியவர்கள் கைது
கர்நாடகாவில் பேருந்தில் பயணித்த இந்து பெண்ணிடம் பேசியதற்காக இஸ்லாமிய ஆண் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 22 வயதுடைய சஹீர் என்ற இளைஞனை தட்சிண கன்னடா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கும்பல் தாக்கியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இளைஞரை தாக்கிய சம்பவத்தில் உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :