வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம்

by Staff / 08-04-2023 05:31:57pm
வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை, கே. பேட்டை, திம்மாச்சிபுரம் பகுதிகளில் வெறி நாய் ஒன்று கடித்ததில் 4 குழந்தைகள், 6 பெண்கள், 5 ஆண்கள் என 15 பேர் ரத்த காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று காலை லாலாபேட்டையில் சுற்றி திரிந்த வெறிநாய் அப்பகுதியில் விவசாய வேலைக்கு செல்வோர், நடந்து செல்வோர் என பல பேரை கடித்துள்ளது. இதை அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே அங்கிருந்து ஓடிய வெறிபிடித்த நாய் அருகில் உள்ள ஆண்டியப்பன்நகர், நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே. பேட்டை ஆகிய பகுதிகளிலும் நடந்து சென்றவர்கள், விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் உட்பட பலரையும் கடித்து குதறியுள்ளது.ரத்த காயம்பட்ட கிரி (4), பரிவாணன் (5), பிரதீஸ்வரர் (6), கிஷோர் (8), ஆகிய 4 சிறுவர்கள், முத்துலெட்சுமி (35), ராதிகா (38), சாந்தி (43), தனபாக்கியம் (62), சந்திரா (53), மல்லிகா (60) ஆகிய 6 பெண்கள், கார்த்திக் (31) செளந்தர்ராஜன் (31), பாலக்குமார் (33), புகழேந்தி (51), மலைக்கொழுந்து (60) ஆகிய 5 ஆண்கள் என மொத்தம் 15 நபர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் குளித்தலை அரசு மருத்துவனைக்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரில் நலன் விசாரித்தார். மேலும் காயம்பட்ட நபர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.ஒரே நாளில் 15 நபர்களை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via