14 மாணவிகள் பிளேடால் வெட்டி தற்கொலை முயற்சி

by Staff / 22-09-2023 11:44:47am
14 மாணவிகள் பிளேடால் வெட்டி தற்கொலை முயற்சி

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தண்டேலி பகுதியில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த 14 சிறுமிகள் தங்கள் மணிக்கட்டை வெட்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது: 'சிறுமிகள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இச்சம்பவத்தில் மனநல மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.

 

Tags :

Share via