சனாதன ஒழிப்பு மாநாடு வழக்கு - இன்று விசாரணை

by Staff / 22-09-2023 11:47:41am
சனாதன ஒழிப்பு மாநாடு வழக்கு - இன்று விசாரணை

சனாதன ஒழிப்பு மாநாடுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சனாதனத்திற்கு எதிராக சென்னையில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டது அரசியல் சாசன அமைப்பு எதிரானது என்று சென்னையைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மாநாட்டில் சனாதனத்தை ஒழிப்பேன் என அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர்கள் உள்பட பல இந்து அமைப்புகளும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

 

Tags :

Share via