கணவருக்கு ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி சிலுவை நகரை சேர்ந்தவர் மரிய டல்லஸ் (வயது 42). மீனவர். இவரது மனைவி அருள் சுனிதா (36). இவர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருள் சுனிதாவை கொலை செய்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசினார்.இது குறித்து கன்னியா குமரிபோலீசார் மரிய டல்லஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மரிய டல்லஸ் கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மரிய டல்லசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் மரிய டல்லசை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
Tags :