முதல்வர், அமைச்சர்கள் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு
புரட்சியாளர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், நாளைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Tags :