தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது: கே.எஸ். அழகிரி

by Editor / 11-07-2021 06:38:51pm
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது: கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பா.ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ராமச்சந்திரன் உருவப்படத்துக்கு கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி கூறியதாவது: தமிழகத்தில் பிரிவினைவாதம் வேண்டாம். வேளாண்துறையில் வளர்ச்சிதான் இங்கு தேவை.

கொங்கு நாடு என்பது அமையாது; அது ஒரு கற்பனை. தமிழக மக்கள் பிரிவினையை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுதான் தமிழகத்தின் குரல்.

 

Tags :

Share via