புல்வாமா என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

by Staff / 11-04-2024 01:31:47pm
புல்வாமா என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்  பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் உள்ள ஃப்ரெஸ்ஸிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுன்டராக மாறியது. இதையடுத்து நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவனின் அடையாளம் மற்றும் குழுவின் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via