ஷெல் கம்பெனிகளிடமிருந்து ரூ. 200 கோடி லஞ்சம் பெற்றார். க. ஸ்டாலின் - அண்ணாமலை

by Staff / 14-04-2023 02:19:05pm
ஷெல் கம்பெனிகளிடமிருந்து ரூ. 200 கோடி லஞ்சம் பெற்றார். க. ஸ்டாலின் - அண்ணாமலை

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தின் போது ஷெல் கம்பெனிகளிடம் இருந்து எம். க. ஸ்டாலின் ரூ. 200 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறினார், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அனுமதி கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59 சதவீதமும், மத்திய அரசு 15 சதவீதமும், மாநில அரசு 21 சதவீதமும் நிதி உதவி அளித்தன. மொத்த திட்ட செலவு ரூ. 14 ஆயிரம் கோடி. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக அவசர அவசரமாக இந்த டெண்டரைக் கொண்டு வருகிறார்கள். 5. 5. 2010ம் ஆண்டு மத்திய அரசு எக்சிஎம் பாலிசியை கொண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு டெண்டரில் கலந்து கொண்டால் அதை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எக்ஸிஎம் பாலிசி கொண்டு வரப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 14. 5. 2010 ஆம் தேதி, அதாவது ஒன்றே நாளில் டெண்டர் வெளியிடப்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும் போது ஒரு திருத்தம் கொண்டு வருகிறார்கள். டெண்டரில் சுங்க வரியை சேர்க்கப் போகிறோம் என்று திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதற்குள் நிதி தொடர்பான கோரிக்கைகள் (நிதி ஏலம்) சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.
ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் சுங்க வரியைச் சேர்க்கக் கூடாது என்று எக்சிஎம் பாலிசி கூறுகிறது. சுங்க வரி சேர்ப்பதற்கு முன்பு ரூ. 1417 கோடி கோரி இருந்த சீனாவைச் சேர்ந்த நிறுவனம் டெண்டருக்கு தகுதி பெற்றது. இரண்டாது இடத்தில் ரூ. 1434 கோடியுடன் ஆல்ஸ்டாம் நிறுவனம் உள்ளது. சுங்க வரி சேர்த்த உடன் இரண்டாவது ஆல்ஸ்டாம் நிறுவனம் முதல் இடத்திற்கு வருகிறது. டெண்டர் முடிந்த பிறகு சுங்க வரியை திருப்பிக் கொடுத்து விட்டார்கள். ஆனால் டெண்டர் ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் ஆல்ஸ்டாம் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆல்ஸ்டாம் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 772 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் எங்களின் நேரடி குற்றச்சாட்டு முதல்வருக்கு 200 கோடி ரூபாய் ஆல்ஸ்டாம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2 நாடுகளைச் சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூ. 200 கோடி மு. க. ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த துறை அப்போது மு. க. ஸ்டாலினிடம் இருந்தது. இது தொடர்பாக நானே சிபிஐக்கு புகார் அளிக்கப் போகிறேன். மத்திய அரசின் 15 சதவீத நிதி உள்ளதால் விசாரிக்க சிபிஐக்கு உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via