125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உலகின் உயரமான அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹூசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை ரூ. 146 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் பீடமானது நாடளுமன்ற கட்டிடம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த பிரம்மாண்ட சிலையை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
Tags :