அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி

by Staff / 15-04-2023 11:29:03am
அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி

மோடி துணைப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் காந்திக்கு டெல்லி 12 துக்ளக் லேனில் ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இதனிடையே ராகுல் காந்தி, நேற்று அந்த பங்களாவை காலி செய்தார். அப்போது ராகுலின் உபகரணங்களை பங்களாவிலிருந்து வேன்கள் மூலம் 10 ஜன்பத் சாலையில் உள்ள அவரது தாயார் சோனியா காந்தியின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

 

Tags :

Share via