ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. சிறுமி தற்கொலை.

by Editor / 18-04-2023 10:13:30pm
ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. சிறுமி தற்கொலை.

சென்னை வேளச்சேரியில் கடந்த 2020ம் ஆண்டு ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.இந்நிலையில், சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த பக்கத்து வீட்டில் வசிக்கும் குணசீலன் (33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய குணசீலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

Tags : ஆபாச படம் சிறுமி தற்கொலை.

Share via