குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 202 4 மகரம் ராசியிலிருந்து மீன ராசி வரை

by Admin / 19-04-2023 01:45:17am
குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 202 4 மகரம் ராசியிலிருந்து மீன ராசி வரை

மகரம் ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 

மகர ராசிக்கு சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
 

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,

ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானஅஷ்டம ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக துலாம் ராசியான
தொழில் ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியானபோக ஸ்தானத்தையும் பார்வையிட  இருக்கின்றார் . 

மகர ராசி அன்பர்களே!
குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுகளை சரியான முறையில் முதலீடுகள் செய்வது சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அரசு சார்ந்த செயல்களில் தாமதம் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.


குரு ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். தூரத்து உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தந்தைவழி உறவுகளிடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்படும் விதத்தில் மாற்றம் காணப்படும். மற்றவர்களை சரியான முறையில் பயன்படுத்தி ஆதாயத்தை உருவாக்குவீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மருத்துவ படிப்பில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும்.

குரு ஒன்பதாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை நம்பி செயல்களில் இறங்குவதை குறைத்துக் கொள்ளவும். இனம்புரியாத சில கவலைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
:வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் வாழ்க்கை தரம் உயரும். எதிர்பாராத சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்த தேக்க நிலை குறையும். வாகன காப்பீடுகளை புதுப்பித்து கொள்ளவும்.
:தாயின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அவ்வப்போது தசை பிடிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.
பெண்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்து செல்லவும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். செயல்களில் வேகத்தை விட விவேகம் வேண்டும். பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அர்த்தமில்லாத பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சில இடங்களில் உங்களை பற்றி தவறான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மாணவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நன்று. ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடு பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.
உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடுமாற்றம் விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்ற முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் சில மறைமுகமான போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான குடும்ப பிரிவினைகள் நீங்கும்.
வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சிலர் ஒதுங்கி செல்வார்கள். புதுமையான சில யுக்திகளால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வியாபார ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த நெருக்கடிகள் சிலருக்கு குறையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.
கலைத் துறையினருக்கு மத்திமமான வரவு உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விவாதங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்புகளை சாதகமாக பயன்படுத்தி முன்னேற்றத்தினை உருவாக்கி கொள்வீர்கள். அரசு சார்ந்த ஒப்பந்தங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆடம்பரமான கற்பனைகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பார்த்த சில பதவிகள் சாதகமாக அமையும்.
சுக ஸ்தான குருவினால் நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கும், செல்வாக்கினை மேம்படுத்தி கொள்வதற்கும் சூழல் ஏற்படும்.
சுக ஸ்தான குருவினால் சிந்தனையின் போக்கில் கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்லவும்.
செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீ பிரத்யங்கரா தேவியை வழிபட முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.


கும்பம் ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானகளத்திர ஸ்தானத்தையுமஏழாம் பார்வையாக துலாம் ராசியானபாக்கிய ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான
 லாப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு, எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே!!
குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரத்தில் இருக்கும் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் நம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாடு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.
 

பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 
உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். அஜீரணம், உடல் சோர்வு போன்றவை அவ்வப்போது தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
:பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் அடிக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வெளி இடங்களுக்கு போகும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். பிரிந்து போன உறவினர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும்.
மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். கடினமான முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அரசு வழியில் எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கான செயல்களில் ஆர்வம் மேம்படும். 
உத்தியோகத்தில் திடீர் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் மேம்படும். திட்டமிடாத சில பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். சட்டம் மற்றும் அதிகாரம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான வரிகளை உரிய நேரத்தில் செலுத்துவது நல்லது. புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். விவசாய பணிகளில் முயற்சிக்கு ஏற்ப ஆதாயமும், செல்வச்சேர்க்கையும் உண்டாகும். வியாபார ரீதியாக கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். வெளியூர் தொடர்பான நபர்களின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கலை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். நவீனத்துவமான முறைகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த படைப்புகள் வெளிப்படும். 
அரசியல்வாதிகள் எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. எதிராக இருப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அரசு ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமான வருமானம் கிடைக்கும். தொண்டர்களை அரவணைத்து செல்வது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.
மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் மேம்படும். செல்வ சேர்க்கை ஏற்படும்.கவனம்:எந்த ஒரு செயலிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் துரிதத்தை விட விவேகம் சிறப்பானதாகும்.
:செவ்வாய்க்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும்.ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வது மேன்மையை ஏற்படுத்தும்.
 


மீனம் ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 மீன ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்துஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானசத்ரு ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக துலாம் ராசியானஅஷ்டம ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான
தொழில் ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

 மீன ராசி அன்பர்களே!
குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் வாக்கு பலிதமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து நிம்மதி பிறக்கும். சுப நிகழ்ச்சிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தன, தான்ய விருத்தி உண்டாகும். குடும்ப உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.

:குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். போட்டி, பொறாமை கொண்டவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வழக்குகளில் இருந்துவந்த சட்ட சிக்கல் குறைந்து எண்ணிய முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். விலகி சென்ற தூரத்து உறவினர்கள் விரும்பி வருவார்கள். பிற மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். விசா கிடைப்பதில் இருந்த தாமதங்கள் விலகும். கௌரவ பொறுப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.
 

எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுத்திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.
 

நோய், நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். மூச்சுத்திணறல், சளி தொந்தரவு போன்றவைகள் குறையும்.
 

பெண்கள் மனம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் மீதான கவலைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் சந்தேக உணர்வுகள் மேம்படும். கல்வி கற்றவர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறைந்து தெளிவு பிறக்கும். ஞாபக மறதி பிரச்சனைகள் குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். விளையாட்டு விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாகும். நண்பர்கள் வழியில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
 

உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். விருப்பமான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டும், மதிப்பும் மேம்படும். தாமதமாகிக் கொண்டிருந்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும்.
 

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். விவசாய பணிகளில் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். வாடிக்கையாளர்களை கவருவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசு சார்ந்த வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.
 

கலை சார்ந்த துறைகளில் உள்ள சில தடைகளால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அறிமுகமில்லாத துறையில் பெரிய அளவிலான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். சிலருக்கு அரசு தொடர்பான மரியாதைகள் கிடைக்கும்.
 

அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முற்போக்கான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். துறை சார்ந்த சபைகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
நன்மைகள்:

குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் எதிர்பாராத சில திடீர் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். இழுபறியான சுபகாரியங்கள் எதிர்பாராத சில உதவிகளால் நிறைவுபெறும்.கவனம்:

குடும்ப ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதும், பேச்சுக்களால் மற்றவர்களை அடக்கி ஆளும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதும் நல்லது.
 ஆலங்குடி குரு பகவானை வியாழக்கிழமையில் தரிசித்து வரவும்.வயது முதிர்ந்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மேன்மையை உருவாக்கும்..
 

 

Tags :

Share via