பீரில் விஷம் கலந்து கொடுத்து மருமகன் கொலை

by Staff / 19-04-2023 12:39:01pm
பீரில் விஷம் கலந்து கொடுத்து மருமகன் கொலை

தெலுங்கானா மாநிலம் மஞ்ச்ரியாலா மாவட்டத்தில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. தண்டேபள்ளி மண்டலம் குடேம் கிராமத்தைச் சேர்ந்த அனில் (22) என்பவர் தனது மாமன் மகளை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது மாமா அந்த இளைஞருக்கு பீரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். அனிலை கத்தியை காட்டி மிரட்டி, விஷம் கலந்த பீரை குடிக்க வைத்துள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி அனில் உயிரிழந்தார். இந்த படுகொலை தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via