திருமண ஆசை காட்டி மோசடி 10 ஆண்டுகள் சிறை

by Staff / 19-04-2023 02:16:49pm
திருமண ஆசை காட்டி மோசடி 10 ஆண்டுகள் சிறை

சென்னை போரூரை சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்பவர் தனியார் நிறுவனம் நடத்திவந்த நிலையில், நாய்களை வாங்கிவிற்கும் பணியையும் செய்துவந்துள்ளார். அதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப்பில் குழுவுல் அசோக் நகரை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகியுள்ளார்.2019ல் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்வதாக கூறிய வார்த்தைகளை நம்பி, மனமொத்து பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதை அடுத்து, அவர் அளித்த புகாரில் மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதுதொடர்பான வழக்கு சென்னை செண்ட்ரல் அருகே உள்ள அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி. ஹெச். முகமதுபாரூக் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பி. ஆரத்தி ஆஜரானார்.வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via