2 வயது ஆண் குழந்தை கடத்தல்; பெண் அதிரடி கைது

by Staff / 20-04-2023 12:56:00pm
2 வயது ஆண் குழந்தை கடத்தல்; பெண் அதிரடி கைது

சேலம் வாழப்பாடி சேசன்சாவடியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42), இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமுருகன் (11), கவின் (2) என்ற 2 மகன்களும், யாழினி (7) என்ற மகளும் உள்ளனர். நேற்று விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கவின் திடீரென காணாமல் போனது. பெற்றோர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியில் லட்சுமி என்பவரின் வீட்டுக்கு வந்த உறவினர் பழனியம்மாளுடன் (34) குழந்தையை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதனால் வாழப்பாடி போலீசில் செந்தில்குமார் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், குழந்தையை கடத்தியதை பழனியம்மாள் ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்தனர்.

 

Tags :

Share via